Published : 05 Aug 2020 07:55 AM
Last Updated : 05 Aug 2020 07:55 AM

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய மேலும் சில ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்

பரங்கிமலை ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் மேலும் சிக்கிய ஊராட்சிச் செயலர்கள், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்.25-ம் தேதிசிட்லபாக்கத்தில் உள்ள பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை லஞ்ச ஒழிப்புபோலீஸார் சோதனை நடத்தினர்.அதில் ரூ.22 லட்சம் ரொக்கம், 12 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன.

பின்னர் கடந்த நவம்பர் மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சிச் செயலர்கள் உட்பட 11 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு ரூ.11 லட்சத்தை கைப்பற்றினர்.

இதையடுத்து பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர் கடலூருக்கும், இன்னொரு பாஸ்கர் என்பவர் திருவள்ளூருக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வேலூருக்கும், பெரும்பாக்கம் ஊராட்சிச் செயலர் ஜெயராமன் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டனர்.

மேலும் இதில் தொடர்புடையஊராட்சிச் செயலர்கள் பெரும்பாக்கம் சேதுபதி, ஒட்டியம்பாக்கம் ஜான்சன், நன்மங்கலம் வேலுசாமி, மேடவாக்கம் பாபு ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல் அகரம்தென் சங்கர் மேடவாக்கத்துக்கும், திரிசூலம் சுந்தரமூர்த்தி நன்மங்கலம் ஊராட்சிக்கும், மூவரசம்பட்டு முருகன் பெரும்பாக்கத்துக்கும், திருவஞ்சேரி சுதா மதுரைப்பாக்கம், கவுல்பஜார் பொற்கொடி மூவரசம்பட்டுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் காட்டாங்கொளத்தூர், குன்றத்தூர், திருப்போரூர் ஒன்றியங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x