ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்; தமிழக அரசு உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஆக.4) பிறப்பித்துள்ள உத்தரவு:

"போலீஸ் ஆப்பரேஷன்ஸ் ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி என்.பாஸ்கரன், தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சிப் பள்ளியின் ஐ.ஜி.யாக ஏற்கெனவே இருந்த ஐபிஎஸ் அதிகாரி மகேந்தர் குமார் ரத்தோட் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

சென்னை வடக்கு போக்குவத்து இணை ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜெய கவுரி, தமிழக ரயில்வே காவல் துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக ரயில்வே காவல்துறை டிஐஜியாக இருந்த எம்.பாண்டியன் ஐபிஎஸ், சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்"

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in