மதுரையில் இன்று ஒரே நாளில் 10 கரோனா நோயாளிகள் பலி

மதுரையில் இன்று ஒரே நாளில் 10 கரோனா நோயாளிகள் பலி
Updated on
1 min read

மதுரையில் இன்று ஒரே நாளில் 10 பேர் கரோனா தொற்று நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று நோய் பரவல் குறைய ஆரம்பித்துள்ளது.

சராசரியாக 500 பேர், 400 பேர், 300 பேர் என பரவிய இந்தத் தொற்று நோய் தற்போது சராசரியாக 150 பேர் என்ற விகித்தில் குறைந்துள்ளது. அதுவும், 80 சதவீதம் மாநகராட்சி வார்டுகளிலேஇந்த தொற்று நோய் அதிகம் பரவுகிறது.

இந்நிலையில், இன்று இந்த தொற்று நோய்க்கு 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 10,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று ஒரே நாளில் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளது. 166 நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in