

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்சம் 26 டிகிரி செல்சியசும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களில் விவரம்:
தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 10 செ.மீ., பந்தலூர் (நீலகிரி) 9 செ.மீ., தேவலா (நீலகிரி), பாலவிடுதி (கரூர்) தலா 8 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை) தலா 7 செ.மீ, அயனாவரம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) திருவள்ளூர் (திருவள்ளூர்) அரக்கோணம் (ராணிப்பேட்டை) துவாக்குடி (திருச்சி) வால்பாறை (கோவை) தலா 6 செ.மீ., சோழவரம் (திருவள்ளூர்) பெரம்பூர் (சென்னை) பஞ்சப்பட்டி (கரூர்) பெரம்பலூர் (புதுக்கோட்டை) சின்கோனா (கோவை) தலா 5 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்டு 5 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்டு 5 வரை அந்தமான் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 2 வரை தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 1முதல் 2 தேதிகளில் கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்டு 5 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 3 முதல் 5 வரை கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்டு 4 முதல் ஆகஸ்டு 5 வரை அந்தமான் தெற்கு வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்டு 4 முதல் 5 தேதிகளில் தெற்கு குஜராத், மகாராஷ்டிரா கடற்கரை கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் அலை முன்னறிவிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்ட் 2 இரவு 11-30 மணி வரை கடல் அலை 2.5 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.