Published : 30 Jul 2020 07:23 AM
Last Updated : 30 Jul 2020 07:23 AM

மின் கேபிள்களை சேதப்படுத்துவோருக்கு மின்வாரியம் கடும் எச்சரிக்கை

பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள மின்சாரக் கேபிள்களை சேதப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் மின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக பூமிக்கடியில் நவீன மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட சில துறைகள் தங்கள் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டும்போது மின்சார கேபிள்களை சேதப்படுத்துகின்றன.

இதனால் மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவதுடன், மின்வாரியத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சென்னையில் அண்மையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம், பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த மின்கேபிள்களை சேதப்படுத்தியது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு மின்வாரியம் ரூ.60 லட்சம் அபராதம் விதித்தது. பூமிக்கடியில் பதிக்கப்படும் மின்கேபிள்களை சேதப்படுத்தினால், சேதப்படுத்தும் நிறுவனங்களிடம் இருந்து இழப்புத் தொகை மற்றும் அபராதம் ஆகியவை சேர்த்து வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x