கந்தசஷ்டி குறித்து அவதூறு: யூ-டியூப் சேனல் நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கந்தசஷ்டி குறித்து அவதூறு: யூ-டியூப் சேனல் நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Updated on
1 min read

கந்தசஷ்டி கவசம் குறித்து தரக்குறைவாக விமர்சித்து ஒரு யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, யூ-டியூப் சேனல் நிர்வாகிகளில் ஒருவரான சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த செந்தில்வாசனை (49) கைது செய்தனர்.

இதன்பிறகு, அவதூறு வீடியோவின் தொகுப்பாளர் சுரேந்தர் (33), ஓட்டேரி சோமசுந்தரம், மறைமலைநகர் குகன் ஆகியோர் நீதிமன்றக் காவலில் அடுத்தடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், செந்தில்வாசனை 4 நாள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, சுரேந்தர் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், செந்தில்வாசன் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in