Published : 29 Jul 2020 07:42 AM
Last Updated : 29 Jul 2020 07:42 AM
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிவிப்பில்,“காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜான்சி ராணி (முன்னாள் எம்எல்ஏ. பொன்னம்மாளின் பேத்தி) அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.சுதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவரும் அவருக்கு தற்போது முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் சுதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT