Last Updated : 28 Jul, 2020 06:48 PM

 

Published : 28 Jul 2020 06:48 PM
Last Updated : 28 Jul 2020 06:48 PM

ஒரே நாளில் 381 பேருக்கு கரோனா: தூத்துக்குடியில் 6000-ஐ கடந்தது பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 381 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,278 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று நாட்களில் 1000-க்கும் அதிகமானோர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று ஏற்பட்டு 36 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் 9 அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுங்கத்துறை அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்கு எதிரேயுள்ள கடைகள் நேற்று முன்தினம் இரவு 9 மணியை தாண்டி நீண்ட நேரமாக திறந்திருந்துள்ளது.

இதனை அந்த வழியாக ரோந்து சென்ற எஸ்பி ஜெயக்குமார் பார்த்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில் 4 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை சீல் வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x