Published : 28 Jul 2020 07:19 AM
Last Updated : 28 Jul 2020 07:19 AM
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து செல்ல செக்வே ஸ்கூட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சைல்ட் ஹெல்ப் லைன் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் ரயில்வே பாதுகாப்பு படையின ருக்கு செக்வே ஸ்கூட்டர் வாகனம் வழங்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்தீப், உதவி ஆய்வாளர் தன சேகரன் ஆகியோர் இதை பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து ரயில்வே பாது காப்பு படை போலீஸார் கூறும் போது, “இந்த வாகனம் மூலம் ரயில் நிலைய நடைமேடைகளில் சோர்வு இல்லால் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட முடியும். பயணி களிடமிருந்து புகார் வந்தால், ரயில் நிற்கும் பகுதி மற்றும் நடைமேடைக்கு உடனடியாக செல்ல வசதியாக இருக்கும் என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT