Published : 26 Jul 2020 11:24 AM
Last Updated : 26 Jul 2020 11:24 AM

சென்னையில் 6-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு லாக்-டவுன்: தடையை மீறி வருவோர் வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது, இதில் இன்று 6வது ஞாயிற்றுக் கிழமையாக முழு லாக்-டவுன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உட்பட பல சாலைகளில் வாகனச் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியத் தேவைக்காக பயணிப்போர், இ-பாஸ் வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர், சாலைகள் அனைத்துமே வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சென்னையை பொறுத்தவரை 280க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸ் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இ-பாஸ் இல்லாமல் பயணம் மேற்கொள்வோர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், வாகனப்பறிமுதல், ரூ.500 அபராதம் விதிக்கிறார்கள்.

இதனையடுத்து சென்னையில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x