Published : 25 Jul 2020 07:58 AM
Last Updated : 25 Jul 2020 07:58 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்த நிலையில், நேற்று நீர்வரத்து சரிந்தது.

தமிழகம் மற்றும் கர்நாடகா காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்வதால், மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் விநாடிக்கு 5,081 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,710 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 69.70 அடியாகவும், நீர் இருப்பு 30.15 டிஎம்சி-யாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x