Published : 25 Jul 2020 07:49 AM
Last Updated : 25 Jul 2020 07:49 AM

குத்தாலத்தில் எண்ணெய் எரிவாயு கிணறு அமைப்பதைத் தடுத்து நிறுத்த கோரிக்கை

மயிலாடுதுறை கோட்டாட் சியர் அலுவலகத்தில், கோட் டாட்சியர் மகாராணியிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று அளித்த மனு:

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் தொடங்கப்பட்டுள்ள எண்ணெய்- எரிவாயு கிணறு அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சீர்காழி- மாதானத்திலிருந்து மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் அமைத்துள்ள எரிவாயு குழாய்களின் கசிவு குறித்தும், இதிலுள்ள விதிமீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x