Published : 25 Jul 2020 07:46 AM
Last Updated : 25 Jul 2020 07:46 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கருப்புக் கொடியேந்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேசிய மீனவர் பேரவை சார்பில் நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அக்கரைப்பேட்டை, கீச்சாம்குப்பம், கல்லார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், பெண்கள் கைகளில் கருப்புக் கொடியேந்தி பங்கேற்றனர். இதேபோல, நாகை நம்பியார் நகர், செருதூர் ஆகிய மீனவ கிராமங்களிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே கடந்த 21-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மீனவக் கிராமங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகளிலும், வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x