Published : 23 Jul 2020 07:28 AM
Last Updated : 23 Jul 2020 07:28 AM

செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரேநாளில் 978 பேருக்கு கரோனா பாதிப்பு

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்

செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 978 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,372 ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று மேலும் 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,697 ஆக உயர்ந்தது. 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

430 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 9,780பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று 430 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,210 ஆக உயர்ந்துள்ளது. 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருந்தொற்று பாதிப்பு 10,272ஆக இருந்தது. நேற்று மேலும் 223 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,495 ஆக உயர்ந்தது. இவர்களில் 210 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 7,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x