

தேனியில் குடிசை மாற்று வாரிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: தேனி மாவட்டத்தின் நகர்ப்புற பகுதிகளில் நீர்நிலை புறம்போக்குகள், சாலை மற்றும் ரயில்வே புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் இவர்களை மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 925 குடிசை வீடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., குடிசை மாற்று வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சண்முகசுந்தரம், உதவிப் பொறியாளர் மணிபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.