Published : 18 Jul 2020 04:10 PM
Last Updated : 18 Jul 2020 04:10 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி: 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரத் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். நாளை (ஜூலை 19) தமிழகம், தெற்கு கடலோரத் தமிழகம், நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, மதுரை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களின் விவரம்:

தேவாலா (நீலகிரி) 10 செ.மீ., சேருமுல்லை (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), வட்டாட்சியர் அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ., நடுவட்டம் (நீலகிரி), வெண்ட் ஒர்த் எஸ்டேட் சேர் (நீலகிரி), சேர் ஹாரிசன் மலையாளம் லிமிடெட் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., கூடலூர் பஜார் (நீலகிரி), சின்னக் கல்லாறு (கோவை) வுட் பிரேயர் எஸ்டேட் (நீலகிரி) மேல் பவானி (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஜூலை 18, 19 தேதிகளில் தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 18, 19 தேதிகளில் மத்தியக் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 18, 19 தேதிகளில் கர்நாடகா, கேரளாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

ஜூலை 21, 22 தேதிகளில் தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 22-ம் தேதி அன்று கர்நாடக, கேரளக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

ஜூலை 22-ம் தேதி அன்று தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். கர்நாடக, கேரளக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x