Published : 18 Jul 2020 08:24 AM
Last Updated : 18 Jul 2020 08:24 AM

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 7 பேருக்கு கரோனா: கட்டணம் ரத்து

கோப்புப் படம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர் ஒருவருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அதே சுங்கச்சாவடி ஊழியர்கள் 6 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் காதர் அலி, சுங்கச்சாவடி நிர்வாக அலுவலரை சந்தித்து, இந்த சுங்கச்சாவடியில் 3 நாட்கள் கட்டண வசூலை நிறுத்துமாறு கூறியதை சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்க மறுத்தது. இதையடுத்து, சுங்கச்சாவடி கட்டண வசூலை நிறுத்தி, பணியாளர்களை தனிமைப்படுத்த வட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் கடந்து செல்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x