Published : 18 Jul 2020 07:15 AM
Last Updated : 18 Jul 2020 07:15 AM
தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னைமாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சில தளர்வுகளுடன் கடந்த ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து இப்பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, கடந்தஜூன் முதலே இந்த நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 6 நலவாரியங்களின் உறுப்பினர்களுக்கு 2-ம் கட்டமாக தலா ரூ.1,000நிவாரணம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரைப்பட தொழிலாளர்கள் நலவாரியத்தைச் சேர்ந்த 9,882பேர், பழங்குடியினர் 656 பேர்,கலைத் துறையினர் 501 பேர்,மூன்றாம் பாலினத்தவர் 1,666பேர், துப்புரவு பணியாளர்கள் 2,797 பேர், சிறுவணிகர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 366 பேருக்கு மொத்தம் ரூ.1 கோடியே58 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக் கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT