Last Updated : 17 Jul, 2020 06:19 PM

 

Published : 17 Jul 2020 06:19 PM
Last Updated : 17 Jul 2020 06:19 PM

நெல்லையில் ஒரே நாளில் 180 பேருக்கு கரோனா: மாநகரில் கிருமிநாசினி தெளிப்புப் பணி தீவிரம்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 180 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று காலையில் கண்டறியப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 2228 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் 77 பேர், அம்பாசமுத்திரம்- 18, சேரன்மகாதேவி- 16, களக்காடு 8, மானூர் 5, நாங்குநேரி 6, பாளையங்கோட்டை தாலுகா 22, பாப்பாக்குடி 5, ராதாபுரம்- 13, வள்ளியூர்- 10 என்று மொத்தம் 180 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2408 ஆக அதிகரித்துள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு:
திருநெல்வேலி மாநகரில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மெகா கிருமி நாசனி தெளிப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற இப்பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்புப் படையினர் கிருமி நாசினி தெளித்தனர்.
அத்துடன் 12 மாநகராட்சி வாகனங்கள், 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்களும் கிருமி நாசனி தெளிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x