Published : 16 Jul 2020 08:48 AM
Last Updated : 16 Jul 2020 08:48 AM

முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியம் அதிமுகவில் இருந்து நீக்கம்

சாத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜி.சுப்பிரமணியம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறி வித்துள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பா ளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடு களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜி.சுப்பிரமணியம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி தொண்டர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x