Published : 16 Jul 2020 08:19 AM
Last Updated : 16 Jul 2020 08:19 AM

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 32-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

கோப்புப் படம்

சென்னை

பாமகவின் 32-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்ட முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கில், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று 31 ஆண்டுகள் முடிந்து 32-வது ஆண்டில் பாமக அடியெடுத்து வைக்கிறது.

இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமகவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், நேற்று பாமக நிறுவனர் ராமதாசை கைபேசியில் தொடர்பு கொண்டு, பாமகவை நிறுவி 31 ஆண்டுகள் நிறைவடைந்து, 32-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

முதல்வரின் வாழ்த்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது நன்றியை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x