Published : 14 Jul 2020 10:16 PM
Last Updated : 14 Jul 2020 10:16 PM

துணை மேலாளருக்கு கரோனா: கோவில்பட்டி ஸ்டேட் வங்கிக்கு 3 நாட்கள் விடுமுறை

கோவில்பட்டி

கோவில்பட்டி பாரத ஸ்ட்ட வங்கி துணை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வங்கிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி பிரதான சாலையில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் கடன் பிரிவு துணை மேலாளருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் ஸ்ரீராம் நகர் நகர்நல மையத்துக்கு சென்று கரோனா பரிசோதனை செய்துள்ளார். அதன் அறிக்கை இன்று காலை வழங்கப்பட்டது. இதில், துணை மேலாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, நகராட்சி ஆணையர் ராஜாராம், வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் சுகாதாரத்துறையினர் வங்கிக்கு சென்று, அங்கு பணியில் இருந்தவர்களை வெளியேற்றி, வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

மேலும், துணை மேலாளருடன் தொடர்பில் இருந்ததாக அறியப்பட்ட 17 பேருக்கு முதற்கட்டமாக சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதைதொடர்ந்து, வங்கிக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து வங்கி நிர்வாகம் அறிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x