Published : 14 Jul 2020 07:44 PM
Last Updated : 14 Jul 2020 07:44 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 4,526 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,078 பேர் பாதிப்பு: 4,743 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று புதிதாக 4,526 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 1,078 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 79 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய (ஜூலை 14) கரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

''தமிழகத்தில் இன்று புதிதாக 4,526 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 41 ஆயிரத்து 357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 16 லட்சத்து 95 ஆயிரத்து 365 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 39 ஆயிரத்து 776 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 16 லட்சத்து 25 ஆயிரத்து 558 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 4,743 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை தமிழகம் முழுவதும் 47 ஆயிரத்து 912 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றுக்கு இன்று மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் அரசு மருத்துவமனைகளில் 50 பேர் என மொத்தம் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது. இன்று இறந்தவர்களுள் 65 பேர் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்களாவர். 2 பேர் இணை நோய்கள் அற்றவர்களாவர்.

இன்று தொற்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,078 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 79 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது.

அரசு சார்பாக 53 மற்றும் தனியார் சார்பாக 53 என 106 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன''.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x