Published : 07 Sep 2015 10:50 AM
Last Updated : 07 Sep 2015 10:50 AM

விமான நிலைய கழிப்பறையில் கிடந்த 1.7 கிலோ தங்கம்

திருச்சி விமான நிலைய கழிப்பறைகளை நேற்று முன்தினம் இரவு துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, ஒரு கழிப்பறையில் 2 பார்சல்கள் கிடந்தன. இதுகுறித்து, விமான நிலைய அலுவலர்களுக்கு துப்புரவுத் தொழி லாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் அங்கு வந்து, பார்சல்களைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 1.70 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் 1.5 கிலோ பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் ஒன்று நேற்று வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பிறகு, ஊழியர்கள் விமானத்தை சுத்தம் செய்ய சென்றனர். அப்போது விமானத்தின் இருக்கையின் கீழ் பிளாஸ் டிக் பை ஒன்று இருந்ததை ஊழியர்கள் பார்த்தனர். தகவல் அறிந்து அதிகாரி கள் வந்து அந்த பையை பிரித்துப் பார்த்தபோது அதில் 1.5 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x