Published : 13 Jul 2020 07:41 AM
Last Updated : 13 Jul 2020 07:41 AM

கரோனாவால் திருமணங்கள் ரத்து; முன்பணத்தை மண்டப உரிமையாளர்கள் திருப்பி அளிக்க அரசு நடவடிக்கை: நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

கரோனாவால் திருமணங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருமண மண்டபங்களுக்கு அளிக்கப்பட்ட முன்பணத்தை திருப்பி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்புத் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது:

திருமண ஏற்பாடுகளில் முதன்மையானது, முன்பணம் செலுத்தி மண்டபத்தை பதிவு செய்வதுதான். கரோனா ஊரடங்கு உத்தரவால், கடந்த மூன்று மாதங்களில் பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கு எந்த வகையிலும் பெற்றோர் காரணமல்ல. எனினும், பல திருமண மண்டபங்கள், தாங்கள் வாங்கிய முன் பணத்தை திருப்பித்தர மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தாங்கள் வாங்கிய முன்பணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்தியிருந்தாலும், அதை மண்டப உரிமையாளர்கள் திரும்பப் பெற முடியும்.

எனவே, இந்தப் பிரச்சினையில் அரசு தலையிட்டு, ரத்து செய்யப்பட்ட திருமணங்களுக்கான முன்பணத்தை உடனடியாக திருப்பியளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x