Published : 13 Jul 2020 07:28 AM
Last Updated : 13 Jul 2020 07:28 AM

என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கடந்த ஜூலை 1-ம் தேதி நெய்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில், அந்த இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 17 பேரில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலை யில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சீப் டெக்னீஷியன் சுரேஷ்(50) என்பவர் நேற்று உயிரிழந்தார். இவரையும் சேர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x