Published : 13 Jul 2020 07:09 AM
Last Updated : 13 Jul 2020 07:09 AM

வேளச்சேரி மின்சார ரயில்கள் ஆதம்பாக்கம் வரை விரைவில் நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயக்கப்படும் ரயில்சேவையை, பரங்கிமலை வரைநீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவுசெய்தது. முதல்கட்டமாக வேளச்சேரி - புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆதம்பாக்கம் - பரங்கிமலை ரயில் திட்டப் பணிக்கு இருந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளதால், மீண்டும்டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளன. இருப்பினும், வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன. எனவே, கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x