Published : 12 Jul 2020 08:35 AM
Last Updated : 12 Jul 2020 08:35 AM

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை 15-ல் தி.க. போராட்டம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சுகாதார, மருத்துவ உதவியை ஒவ்வொருவருக்கும் அளிப்பதை உரிமையாக்க வேண்டும், தனியார் துறையில் இடஒதுக்கீடு, மத்திய தொகுப்பில் மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி திராவிடர் கழகத்தின் மாணவர் அணி சார்பில் அனைத்து ஊர்களிலும் போராட்டம் நடைபெறும். அவரவர் வீட்டு முன், முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளி விட்டு, பதாகைகள் ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அறப்போராட்டம் நடக்க உள்ளது எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x