Published : 12 Jul 2020 08:34 AM
Last Updated : 12 Jul 2020 08:34 AM

வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 310-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித் தார். அழகுமுத்துக்கோன் உருவச் சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம் பூர் செ. ராஜு மாலை அணி வித்தார்.

பின்னர் அமைச்சர் கூறும்போது, ஓட்டப்பிடாரம் அருகே கவர் னகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ரூ.72.70 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் மற்றும் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தை ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணியும், கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.

விளாத்திகுளம் எம்எல்ஏ சின் னப்பன், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், கோட்டாட்சியர் விஜயா பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x