Published : 12 Jul 2020 08:29 AM
Last Updated : 12 Jul 2020 08:29 AM
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஸ்ரீநாத் சென்னை குற்ற புலனாய்வுத்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் பத்ரி நாராயணன் குமரி மாவட்ட புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார். இதைப்போல் நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த ஜவகர் பதவி உயர்வு பெற்று சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT