Published : 12 Jul 2020 08:10 AM
Last Updated : 12 Jul 2020 08:10 AM
தருமபுரியில் போலீஸாருக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய காவல் உட்கோட்ட எல்லைகளுக்கு உட்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் தொடங்கி அனைத்து காவலர்களும் பங்கேற்றனர்.
கைது நடவடிக்கைகளின்போது காவலர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், கரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கு பணியினை செயல்படுத்தும்போது கண்ணியமாக நடந்து கொள்ளும் விதம் போன்றவை குறித்து காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT