Published : 12 Jul 2020 07:28 AM
Last Updated : 12 Jul 2020 07:28 AM
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கரோனா பரவல் தடுப்பு பணிகளைமாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் கடந்த 11 நாட்களாக தொற்று குறைந்து வருகிறது.காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் இதுவரை 10 லட்சத்துக்கும்மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 81 இடங்களில் காய்கறி மற்றும் இறைச்சி சந்தைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதிகள் மற்றும் காய்கறி, இறைச்சி, மளிகைக் கடைகளில் கரோனா பரவலை தடுக்க, உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிப்பதற்காக கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் 81 சந்தை ஒழுங்குபடுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT