ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி குணமடைந்து வீடு திரும்பும் கரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை எடுப்பதில்லை: மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் 

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி குணமடைந்து வீடு திரும்பும் கரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை எடுப்பதில்லை: மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் 
Updated on
1 min read

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் படி குணமடைந்து வீடு திரும்பும் போது பரிசோதனை எடுக்கப்படுவதில்லை என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி தெரித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தினமும் 3000 பேருக்கு கரானா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

தற்போது 2,000 பேருக்கு மட்டுமே கரானா பரிசோதனை செய்து வருகிறோம். இதில், தொற்று உறுதி செய்யாதவர்களுக்கும், அவர்களுடைய நோய் தொந்தரவுகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கிறோம்.

அரசு மருத்துவமனையில் 8 மணி நேரத்தில் கரோனா முடிவினை கொடுத்து வருகிறோம்.

ஐசிஎம்ஆர் மற்றும் தமிழக அரசு வழிகாட்டுதல்படி கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது பரிசோதனை எடுக்கப்படுவதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in