Published : 18 Sep 2015 04:24 PM
Last Updated : 18 Sep 2015 04:24 PM

தமிழகத்தில் கட்டுக்குள் டெங்கு காய்ச்சல்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘‘இந்தியாவின் தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறு ஆகிய சித்த மருந்துகள் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது’’ என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x