கோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு

கோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்துக்கு, குமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து வரும் ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தினமும் வினாடிக்கு 75 கன அடி வீதம் 194.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக் கப்படும். இதனால், ராதாபுரம் தாலுகா வில் 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in