Published : 10 Jul 2020 07:35 AM
Last Updated : 10 Jul 2020 07:35 AM

ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு: எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் உதவி

ஈரோடு ராஜாஜிபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் நிவாரணப் பொருள் வழங்கினர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள், கே.வி.ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ . கே.வி.ராமலிங்கம் கூறியதாவது:

ஈரோடு மாநகர், மாவட்ட அதிமுக சார்பில், ஈரோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளிலும், சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளிலும், நசியனூர் சித்தோடு பேரூராட்சிகளில் 30 ஆயிரம் குடும்பங்களுக்கும் அரிசி காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 27-வது வார்டில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்பட்டது. ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு லட்சம் குடும்பங் களுக்கு எனது சொந்த செலவில் காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x