Published : 10 Jul 2020 07:20 AM
Last Updated : 10 Jul 2020 07:20 AM

செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் குடும்பத்தில் மகள் உட்பட மேலும் 5 பேருக்கு கரோனா

செஞ்சி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கடந்த ஜூன் 27-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் மருத்துவமனைக்குச் சென்ற அவரது மனைவி, மகன் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மஸ்தானின் 3-வது மகள், 2-வது மகளின் 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருவர் என 5 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்களுக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 5 பேரும் மேல்மருத்துவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x