Published : 10 Jul 2020 07:07 AM
Last Updated : 10 Jul 2020 07:07 AM

சென்னையில் கரோனா தொற்று இரட்டிப்பாக 25 நாள் ஆகிறது: மாநகராட்சி நிர்வாகம் தகவல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாக 25 நாள் ஆகிறது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை 72,500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 49,587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,146 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவில் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 9,242 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தற்போது 1,741 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்று வருவோரில் 20 முதல் 29 வயதுவரை, 30 முதல் 39 வயது வரை,40 முதல் 49 வயது வரையிலானவர்கள் தலா 18 சதவீதம் உள்ளனர்.

சென்னையில் தொடர்ந்துதினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். தற்போது 1500-க்கும் குறைவாக பதிவாகி வருகிறது.

ஜூலை 6-ம் தேதி நிலவரப்படி சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 நாட்களில் இரட்டிப்பு ஆவதாகமாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தொற்று அதிகமாக கண்டறியப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாக 57 நாட்கள் ஆகின்றன.

ஆலந்தூர் மண்டலத்தில் 20 நாட்களில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. தமிழகத்தில் 16 நாட்களில் தொற்று இரட்டிப்பாவதாக சுகாதார வல்லுநர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x