மருத்துவமனையில் இருந்து தப்பிய கரோனா தொற்றாளர் பிடிபட்டார்

மருத்துவமனையில் இருந்து தப்பிய கரோனா தொற்றாளர் பிடிபட்டார்
Updated on
1 min read

கரோனா தொற்றால் பாதிக் கப்பட்ட வானூர் அருகே உள்ள தென்கோடிப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 6-ம் தேதி இரவு அந்த நபர், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் போலீஸார், அவரது வீட்டுக்குச் சென்று மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மன இறுக்கத்தில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தப்பி ஓடினார். சொந்த ஊரில் இருந்த அவரை போலீஸார் மீட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அவரை மருத்துவமனை ஊழியர்கள் தீவிரமாக கண்கா ணித்து வருகின்றனர். அவருடன் தொடர் பில் இருந்த குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in