Published : 08 Jul 2020 08:12 AM
Last Updated : 08 Jul 2020 08:12 AM

ஆண்டிபட்டியில் இன்று முதல் முழு ஊரடங்கு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு இதுவரை 30-க்கும் மேற்பட்டோ ருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வருவாய்த் துறை சார்பில் வணிகர்களுடன்நடந்த ஆலோசனைக் கூட்டத் துக்கு வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஜூலை 8 (இன்று) முதல் வரும் 17-ம் தேதி வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x