Published : 08 Jul 2020 08:12 AM
Last Updated : 08 Jul 2020 08:12 AM
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு இதுவரை 30-க்கும் மேற்பட்டோ ருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வருவாய்த் துறை சார்பில் வணிகர்களுடன்நடந்த ஆலோசனைக் கூட்டத் துக்கு வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஜூலை 8 (இன்று) முதல் வரும் 17-ம் தேதி வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT