Published : 08 Jul 2020 07:51 AM
Last Updated : 08 Jul 2020 07:51 AM

என்எல்சி கொதிகலன் விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

நெய்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தில் கடந்த 1-ம் தேதி கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் அந்த இடத்தி லேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந் தனர்.

சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த அவர்களில், 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளி ஆனந்த பத்பநாபன்(50) என்பவர் நேற்று உயிரிழந்தார். இவரையும் சேர்த்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x