Published : 08 Jul 2020 07:03 AM
Last Updated : 08 Jul 2020 07:03 AM

பயிர்க் காப்பீடு திட்ட செயல்பாட்டில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கிய 2016-17-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.8,155 கோடியே33 லட்சம் இழப்பீட்டுத் தொகைசுமார் 40 லட்சத்து 84 ஆயிரம்விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 70 சதவீதவிவசாயிகள் பயனடைந்துள் ளனர். சென்ற ஆண்டில், காரிப் பருவத்தில் பதிவு செய்த 85,045 விவசாயிகளுக்கு, காப்பீட்டு நிறுவனங்களால் ரூ.68 கோடியே 91 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மேலும்பயன்பெறும் வகையில் மத்தியஅரசு பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்வதற்கு வரும் 31-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று இத்திட்டத்தில் பதிவ செய்ய விரும்பாத விவசாயிகள், நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே, விருப்பமில்லா மனுவைகடன் பெறும் வங்கியில் அளிக்கலாம். மேலும், வங்கிகளில் கடன்பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ அல்லதுவங்கியிலோ நடப்பு ஆண்டுக்கானஅடங்கல், ஆதார் அட்டை நகல்,வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், முன்மொழிவுபடிவம் போன்ற ஆவணங்களை வழங்கி, தங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கிய 2016-17-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.8,155 கோடியே
33 லட்சம் இழப்பீட்டுத் தொகை 40 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x