சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 65 பேர் குணமடைந்தனர்: 22 பேருக்கு கரோனா உறுதி

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 65 பேர் குணமடைந்தனர்: 22 பேருக்கு கரோனா உறுதி
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 65 பேர் குணமடைந்தனர். மேலும் 22 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 405 பேர் குணமடைந்தனர். தற்போது 200 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 65 பேர் குணமடைந்தனர். இது அதிகரித்துவரும் தொற்றுக்கு இடையே ஆறுதல் தரும் செய்தியாக அமைந்தது.

குணமடைந்தோரை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமது ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று பகல் 12 மணி வரை 22 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in