Published : 06 Jul 2020 07:51 AM
Last Updated : 06 Jul 2020 07:51 AM
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகேயுள்ள மின்மாற்றியில் நேற்று முன்தினம் 3 வயது மதிக்கத்தக்க பெண் மயில் சிக்கி உயிரிழந்தது.
அந்த மயிலின் உடலுக்கு காவலர் ஒருவர் தேசியக் கொடி போர்த்தி, அஞ்சலி செலுத்தினார். பின்னர், மயிலின் சடலம் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கிடையே, மயிலின் சடலத்தில் தேசியக் கொடியை போர்த்தியதும், பின்னர் கொடியோடு உடலைச் சுற்றி சாக்குப்பையில் போட்டு வனத் துறையிடம் ஒப்படைத்ததும் விதிமீறல் என்ற சர்ச்சை எழுந்தது. காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில், இவ்விவகாரம் தொடர்பாக துணை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT