Published : 04 Jul 2020 07:44 AM
Last Updated : 04 Jul 2020 07:44 AM

108 ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் சென்ற கரோனா நோயாளி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா நாராசா வீதியைச் சேர்ந்த 58 வயது நபர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த 1-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் அதிகாலை 4 மணி வரை வாகனம் வராததால், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x