மேட்டூர் அணை நீர்மட்டம் 88.21 அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 88.21 அடியாக சரிவு
Updated on
1 min read

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருந்ததால், அணை நீர்மட்டம் படிப்படியாக சரிய தொடங்கியது. கடந்த 12-ம் தேதி 101.73 அடியாக இருந்த நீர்மட்டம், கடந்த 22 நாட்களில் 13.52 அடி குறைந்து நேற்று காலை 88.21 அடியானது. நீர்வரத்து விநாடிக்கு 938 கனஅடியாகவும், நீர் இருப்பு 50.63 டிஎம்சி-யாகவும் உள்ளது.

பென்னாகரத்தில் 26 மி.மீ மழை: தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நேற்று முன் தினம் இரவு 26 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக பென்னாகரத்தில் 26 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுதவிர, பாப்பிரெட்டிப்பட்டியில் 10 மி.மீட்டர் மழை, தருமபுரியில் 2 மி.மீட்டர், ஒகேனக்கல்லில் 1 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in