Published : 04 Jul 2020 07:31 AM
Last Updated : 04 Jul 2020 07:31 AM

கரோனா தொற்றுடைய 7 கர்ப்பிணிகளுக்கு வைரஸ் பாதிப்பின்றி பிறந்த குழந்தைகள்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட 19 கர்ப்பிணிகளில் இதுவரை 7 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. இவர்களில் 5 பேருக்கு அறுவை சிகிச்சையும், 2 பேருக்கு சுகப் பிரசவமும் நடைபெற்றுள்ளது. இந்த 7 குழந்தைகளுக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், குழந்தை பெற்ற பெண்களில் திருநெய்ப்பேர், வண்டுவாஞ்சேரி, கூத்தாநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்ததால், நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் 47 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் காவலர் உள்ளிட்ட 3 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x