Published : 04 Jul 2020 07:01 AM
Last Updated : 04 Jul 2020 07:01 AM

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் நியமனம்

தமிழ்ச்செல்வன்

சென்னை

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ் நியமிக் கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த 30-ம் தேதி மாற்றப்பட்டனர். சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில்,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த என்.தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x