கரோனா சிகிச்சை பெற்று வந்த கிராம உதவியாளர் உயிரிழப்பு

கரோனா சிகிச்சை பெற்று வந்த கிராம உதவியாளர் உயிரிழப்பு
Updated on
1 min read

கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிராம உதவியாளர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (59). கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 30ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். கடந்த 1-ம் தேதி அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ள க ரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு முருகேசன் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இன்று காலை முருகேசன் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 614 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 249 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 358 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிராம உதவியாளர் முருகேசனின் உயிரிழப்பை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in