Last Updated : 02 Jul, 2020 08:05 PM

 

Published : 02 Jul 2020 08:05 PM
Last Updated : 02 Jul 2020 08:05 PM

சிவகங்கை மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா: ஒரேநாளில் 27 பேர் குணமடைந்தனர்

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று பகல் 12 மணி வரை 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 27 பேர் குணமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். இதுவரை 380-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 270-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர். நேற்று மட்டும் கரோனாவில் இருந்து 27 பேர் குணமடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனா, முகமதுரபீக் ஆகியோர் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.

மேலும் நேற்று இரவு முதல் இன்று பகல் 12 மணி வரை தேவகோட்டை, தாளையூர், திருப்பத்தூர் காளாப்பூர், சிங்கம்புணரி, குமாரக்குறிச்சி, மானாமதுரை, அரமண்மனை சிறுவயல், செம்பனூர், திருப்புவனம், மடப்புரம், பழையூர், சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x